சோதனைகளையும் தாண்டி சாதனைகள் படைக்கும் எல்லா பெண் எழுத்தாளர்களுக்கும் ஒரு சல்யூட்
என்னை தெரிந்த வாசகர்களுக்கும் தெரிந்து கொள்ள பிரியப்படுபவர்களுக்கும் எல்லோருக்கும் வந்தனங்கள்.
நீண்ட இடைவெளிவிட்டு மீண்டும் உங்களை சந்திப்பதில் ரொம்ப சந்தோசம்! உலகம் படு வேகமாக சுத்தி போச்சுப்பா! நாங்க திரும்பி பார்க்கும் போது பத்து வருஷம் ஓடியே போச்சு. lockdown ஆனதில் ஆற அமர ஒரு நாள் நெட் இல் உக்கார்ந்த பொழுது தான் தெரியவந்திச்சு நாம எவ்ளோ பாப்புலர்ன்னு ! நமக்காக ஒரு வாசகர் பட்டாளமே இருக்குன்னு….அடடா ரொம்ப மிஸ் பண்ணிட்டோமோ என்று பீலிங் வந்திச்சு.. இரு கைகள் ஒரு மூளை போதாதுப்பா !
. எனது நாவல்களை மீண்டும் படிக்க கிடைக்குமா என கேட்டவங்களுக்கும் புதிதாக படித்து பிடித்து போகப்போறவர்களுக்கும் பிடிக்காமல் போகுறவர்களுக்கும் சேர்த்து
எந்த வெப்சைடில் 2007 வாசித்தீர்களோ அந்த வெப்சைட்டில் மீண்டும் PDF இல் அப்லோட்.
1-நீதான் எந்தன் சுவாசமாய் (அழகிய அசுரா )
2-எங்கே என் மனம்
3-உருகாதோ எந்தன் உள்ளம்
4-நிலாவே வா
5-யாரின் மனம் யாருக்கென்று
6-என்னில் நீயடி !
மிக விரைவில்
நீ எனக்கென !
(இன்னும் பல files தேடுவதற்கு FBI CBI கிட்டே சொல்லியிருக்கு பார்ப்போம்…)
அன்புடன் எஸ்.ஜோ
One Response to “சோதனைகளையும் தாண்டி சாதனைகள் படைக்கும் எல்லா பெண் எழுத்தாளர்களுக்கும் ஒரு சல்யூட்”